×

சாராயம், மது விற்ற வழக்கில் 89 பேர் கைது

அரூர், மே 6: அரூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார், மாதந்தோறும் சோதனை நடத்துவது வழக்கம். இதன்படி அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்ற மாதம் சோதனை செய்யப்பட்டது. அதில், கள்ளச்சாராயம், மதுபாட்டில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது மற்றும் ஓட்டல், பெட்டிக் கடையில் மது குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட என 9 பெண்கள் உள்பட 89 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1431 மதுபாட்டில்கள், 25 லிட்டர் சாராயம், 27 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சாராயம், மது விற்ற வழக்கில் 89 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arur ,Kottapati ,Gopinathampatty ,Morapur ,Kampaynallur ,A. Schoolbar ,Papreetipati ,Bommidi ,Khattur Police Station ,Dinakaran ,
× RELATED விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி